சாஹோ பார்க்க கூடிய படமே !

சாஹோ படத்தை படத்தோட ஒன்றி பக்கமுடியலைன்னு சொல்றது மட்டும் தான் சரி. மத்தபடி இந்த ரிவியூவர்ஸ் சொல்ற மாதிரி பாக்க முடியாத அளவுக்கெள்ளாம் இல்ல.அதுபோக இந்த ரிவியூஸ் எல்லாத்தையும் கொஞ்சம் கவனுச்சு பாருங்க.

ஒருத்தர் என்னடான்னா படத்தின் இசை யாருன்னு தப்பா சொல்றாரு !
இன்னொருத்தர் கதை எங்க நடக்குன்னு தெரியலைன்னு சொல்றாரு ! அத பட தொடக்கத்துல வாய்ஸ் ஓவர்ல சொல்றாங்க. ஒருவேல அந்த ரிவியூவர் படத்துக்கு லேட்டா போயிருப்பாரு போல
ஒருத்தர் கொஞ்சம் பட்டும் படாம சொல்றாரு.
இவங்களால நடந்த நல்லது ஒன்னே ஒன்னு தான், இந்த படத்துக்கு கவுண்டர் டிக்கெட்டே சுலபமா கிடைக்குது.
ஒருவேளை, இந்த paid reviews இருக்குறது உண்மை தானோ? . ஏன்னா இதவிட மொக்க படமெல்லாம் பாராட்டப்பட்டுருக்கு.
1
சாஹோல இருக்குற பிரச்சனை மொத்தம் 3.
1.ஆக்‌ஷன் காட்சிகளை கொஞ்சம் tone down பண்ணிருக்கலாம்,
2.அப்டியே அந்த bad boy பாட்டுக்கு முன்ன-பின்ன சில நிமிஷம் தூக்கிருக்கலாம் நல்லா இருந்திருக்கும்.
3.அப்புறம் டப்பிங் வசனம், பாகுபலி வெற்றி பெற்றதுக்கு அதன் வசனமும் ஒரு காரணம். அதையும் படக்குழு கொஞ்சம் கவனித்திருந்தால் நிச்சயம் படம் பேசப்பட்டிருக்கும்.
மத்தபடி கதையில்ல, screen இல்ல, play இல்லன்னு சொல்றதெல்லாம் சும்மா. இந்த 3 பிரச்சனைய சரி செஞ்சிருந்தாலே படம் நல்ல ஓடியிருக்கும் என்ன logic இல்லன்னு சொல்லிருப்பாங்க அவ்வளவே.
ஒன்னு மட்டும் நல்ல தெருஞ்சது, தியேட்டர்ல ஒருத்தன் சும்மா சும்மா கமெண்ட் குட்த்துட்டே இருந்தான், வந்து ரிவியூவ் பாத்தாதான் தெரியுது இந்த ரிவியூவர்ஸ் சொன்ன இடத்துல சரியா கத்திருக்கான் இதெல்லாம் பாத்துட்டுத்தான் வந்துருக்கான் போல. இதுக்கு எதுக்கு வரனும் தனக்குன்னு ஒரு ரசனை இல்லாத மாதிரி மாத்திக்குறாங்க போல எல்லாரும்.

இயற்கை மீது காதல் கொள்ள வைக்கும் : வனமகன்

காடும் காடு சார்ந்த படத்தில், கணிணி கவிஞனின் சொல் விளையாட்டிலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும் பாடல்கள் அனைத்தும் நிஜ காட்டின் ரம்யத்தன்மையுடன் இருக்கிறது.

ஆல்பமில் கேட்டதும் நம்மை சட்டென தழுவி கட்டிப்போடும் பாடல் “யம்மா ஏ அழகம்மா” காட்டின் பிள்ளையை கண்டு வியக்கும் ஓர் காரிகை. அவனின் வெள்ளையுள்ளம் கண்டு விழியுயர்த்தி தன் ஐயம் அனைத்தையும் கேட்கிறாள் பாடலாக!

“ஒரு சில நொடி குழந்தயைபோலே
மறு சில நொடி கடவுளை போலே
பல சில நொடி அதனினும் மேலாய் நீயானாய்”

காட்டின் வனப்பையும் இயற்கையின் அபரிமிதமான அழகையும் ரசிக்க வைக்கும் பாடல், மென்மையான இசை விஜயேசுதாஸின் குரல் என இதை கேட்டதும்  நிச்சயம் வனம்புக தூண்டும், இயற்கையுடன் ஒன்றி வாழ நிச்சயம் தூண்டும்.

“சொர்க்கம் இது தானம்மா
மேலே கிடையாதாம்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும்
புரியாதம்மா”

வனமகன் மனிதன் வாழும் எல்லைக்குள் நிழைந்தால் அவன் எதை எல்லாம் எதிர் கொள்ள வேண்டும், நாம் எதை எல்லாம் சகித்து வாழ்கிறோம் என இயந்திரதனமான வாழ்கையின் சில பதிவுகள்.

“ஒரு accident-அ பாத்து selfie எடுத்தா
கலைஞன் டா நீ கலைஞன் டா
…..
உடையா உணவா உறவா ஒடனே
நீ Google–ல் தேடு”

Vanamagan-Movie-First-Look-Posters-2
காதல் கொள்ளும் காட்டின் மகன், இயற்கை ரசிக்கும் நகரத்து காரிகை. வனத்தை ரசிக்கிறாள் இயற்கையின் உவமை கொண்டு இருவரும் காதல் பாடுகிறார்கள். அப்புறம் என்ன நமக்கு ரசித்து கேட்க ஒரு மென்பாடல்.

“இலைகள் அனிந்த பூஞ்சிலையே
மனம் இலையுதிர் காலம் கேட்குதடி”

தீம் மியூசிக் – எப்போதும் போல் ஹாரிஸ் படத்தின் தளத்தை பிரதிபளிக்கிறார். 50வது படம் கேட்க்கவா வேண்டும்.

அனைத்து பாடல்களையும் திகட்ட திகட்ட இயற்கை குழைத்து எழுதிய கார்க்கி-க்கு நிச்சயம் சில பல கொத்துகள் அனுப்பலாம்.

வனமகன் – இயற்கை மீது காதல் கொள்ள வைப்பான்